பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்த நாளையொட்டி, பிரபல தகவல் தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம், சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை தனது முகப்பு பக்கத்தில் பதிவிட்டு கௌரவித்துள்ளது.
நடிப்புக்கே தனிப்பெரும் உதாரணமாகத் திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். இவர் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள், தெலங்கு மொழியில் 9 திரைப்படங்கள், ஹிந்தியில் 2 படங்கள் மற்றும் 1 மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். நாம் நேரில் பார்த்திராத சுதந்திரப் போராட்ட வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, சரித்திர வீரர்களான மனோகரா, ராஜ ராஜ சோழன், கர்ணன் போன்ற கதாபாத்திரங்களில் திறமையாக நடித்து தலைவர்களை நம் கண் முன்னே கொண்டு வந்த நடிப்புலக சக்கரவர்த்தி சிவாஜி கணேசன்.
1952 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் திரைக்கதை, வசனத்தில் உருவான பராசக்தி திரைப்படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார் சிவாஜி.
இதையும் படிக்கலாமே.. சிவாஜி கணேசனும் பெருமாள் முதலியாரும்
அனைத்து திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், கந்தன் கருணை, திருமால் பெருமை போன்று அனைத்து கடவுகளின் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்திய திரையுலகில் செவாலியர் பட்டம் முதல் நடிகர் சிவாஜி கணேசன். இவர் கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷன், தாதா சாகெப் பால்கே விருது பல விருதுகள் இவரது நடிப்பின் திறமையை கௌரவிக்கின்றன.
இன்று சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்தநாளையொட்டி, பிரபல தகவல் தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம், சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை தனது முகப்பு பக்கத்தில் பதிவிட்டு கௌரவித்துள்ளது.
சின்னையா மன்ராயர் - ராஜாமணி தம்பதியருக்கு நான்காவது மகனாக 01.10.1927 ஆம் தேதி பிறந்தவர் கணேசன். கணேசன் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு மேடை நாடகங்களில் நடித்து வந்தார். இவர் 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்தே சிவாஜி கணேசன் என்ற பெயர் நிலைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 04) - இன்று வெற்றி யாருக்கு?

லிவ் இன் முறையில் வாழ்பவா்களுக்கும் ஐபிசி பிரிவு 498ஏ பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

தொழில்நுட்பத்துக்கு கைமாறும் அதிகாரங்கள்
சென்னை - குருவாயூா் விரைவு ரயில் 10 நாள்கள் தாமதமாக இயங்கும்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



