தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சென்னையில் சற்று அதிகரித்துள்ளது. சென்னையுடன் ஒப்பிடுகையில் கோவையில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
சென்னையில் ஏற்கெனவே 184 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 181-ஆக அதிகரித்துள்ளது. கோவையில் அதிகரித்திருந்த கரோனா 155-ஆக குறைந்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு -103, தஞ்சாவூர் -90, ஈரோடு -88,
திருவள்ளூர் 60, சேலம் -51, திருச்சி -50, நாமக்கல் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
12 வயதுக்குட்பட்ட 94 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.