பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திருமண விழாவில் சோகம்; மின்சாரம் தாக்கி சமையற்கலைஞர் மரணம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண விழாவுக்கு பூதலூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (29) என்பவர் சமையல் பணிக்கு வந்துள்ளார்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 4:58 am

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண விழாவுக்கு பூதலூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (29) என்பவர் சமையல் பணிக்கு வந்துள்ளார்.

வியாழக்கிழமை காலை உணவுக்குப் பிறகு மின்விசிறியைப் போடுவதற்காக சென்ற அவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதையடுத்து அந்த இடத்திலேயே தர்மராஜ் உயிரிழந்தார். உடற்கூராய்வுக்காக அவரது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கீரனூர் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.