தமிழகத்தில் இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் இதுவரை 10.17 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் மூன்றாவது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் 20,000 இடங்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வருகிறது. 15 லட்சம் பேருக்கு போடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தமிழகத்துக்கு வந்துள்ள 29 லட்சம் கரோனா தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.
மெகா தடுப்பூசி முகாமை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையின் பல்வேறு முகாம்களில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மக்களிடம் தடுப்பூசி விழிப்புணர்வு குறித்துப் பேசினார்.
இதையடுத்து இன்று பிற்பகல் 12.45 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் 10.17 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | தமிழகம் முழுவதும் மூன்றாவது கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது!