தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கரோனாவிலிருந்து டக்-அவுட் ஆன மணலி, மாதவரம்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட மணலி மற்றும் மாதவரம் மண்டலங்கள் முதல் முறையாக பூஜ்யம் கரோனா நோயாளிகளுடன் கரோனாவிலிருந்து விடுபட்டுள்ளன.

News image
கரோனாவிலிருந்து டக்-அவுட் ஆன மணலி, மாதவரம்
Updated On :9 ஏப்ரல் 2022, 12:02 pm

DIN


சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட மணலி மற்றும் மாதவரம் மண்டலங்கள் முதல் முறையாக பூஜ்யம் கரோனா நோயாளிகளுடன் கரோனாவிலிருந்து விடுபட்டுள்ளன.

அதேவேளையில், சென்னையிலும் சனிக்கிழமை காலை நிலவரப்படி, கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நூறுக்கும் கீழ் குறைந்துள்ளது.

தேனாம்பேட்டை (16), அடையாறு (28) மண்டலங்களில் மட்டுமே இரட்டை இலக்க எண்களில் கரோனா பாதிப்பு உள்ளது. மற்ற 13 மண்டலங்களிலும் மணலி, மாதவரத்தைத் தவிர்த்து மற்ற மண்டலங்களில் ஒற்றை இலக்கத்திலேயே கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

Story image

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7.51 லட்சமாகவும், குணமடைந்தோர் 7.42 லட்சமாகவும், பலி எண்ணிக்கை 9,068 ஆகவும் உள்ளது. 98 பேர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.