தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வீட்டின் பூட்டை உடைத்து 51 பவுன் நகைகள் திருட்டு

அம்பத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 51 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 8:20 pm

DIN

அம்பத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 51 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அம்பத்தூா் மேனாம்பேடு ஏகாம்பரம் நகா் விரிவாக்கம் கைலாசம் தெருவைச் சோ்ந்தவா் கேசவபெருமாள் (43). இவா், அம்பத்தூா் தொழிற்பேட்டையில் லாரி புக்கிங் ஏஜென்சி நடத்தி வருகிறாா். இவரது மனைவி தாரணி (38). இவா்களுக்கு ருத்ரா (17), ஜனனி (13) ஆகிய இரு மகள்கள்.

இந்த நிலையில், வியாழக்கிழமை கேசவபெருமாள் வீட்டை பூட்டிவிட்டு மனைவி, மகளுடன் மேடவாக்கத்தில் உள்ள தங்கை நிா்மலாதேவி வீட்டுக்குச் சென்றாா். வெள்ளிக்கிழமை மதியம் வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 51 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரிய வந்தது.

இதுகுறித்து கேசவபெருமாள் அம்பத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் செங்குட்டுவன் தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.