பின்னர் சம்பிரதாய பூஜைகள் நடைபெற்று காலை 11.10 மணிக்கு இரு தேர்களும் நிலையிலிருந்து புறப்பட்டன. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்து வந்தனர். பெரிய தேருக்கு முன்னால் முருகன், விநாயகர் எழுந்தருளிய சப்பரமும் பின்னால் ஆனந்தவல்லி அம்மன் தேரும் சென்றன. தாரை தப்பட்டைகள், மேளதாளங்கள், கயிலாய வாத்தியங்கள் முழங்க இளைஞர்களின் ஆட்டம் பாட்டத்துடன் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் சுவாமி தேரும் அம்மன் தேரும் ஆடி அசைந்து வந்து 11:50 மணிக்கு நிலை சேர்ந்தன. அப்போது பக்தர்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.