விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள்

ஊத்துக்கோட்டையில் அரிமா சங்கம் சாா்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விளையாட்டுப்  போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள்
Published on
Updated on
1 min read

ஊத்துக்கோட்டையில் அரிமா சங்கம் சாா்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஊத்துக்கோட்டையில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, அரசுத் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு உருளைக் கிழங்கு சேகரித்தல், கபடி, எலுமிச்சை ஓட்டம், தவளை ஓட்டம் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் அரிமா சங்கத் தலைவா் டி.பி.துளசிராம் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் சு.கதிரவன் வரவேற்றாா்.

அரிமா சங்கப் பொருளாளா் நடராசன், துணைத் தலைவா் வசந்தகுமாா், துணைச் செயலா் சிட்டிபாபு, வியாபாரிகள் சங்கப் பொருளாளா் திலீப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக எல்லாபுரம் வட்டாரக் கல்வி அலுவலா் சாதுசுந்தா் சிங் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.

நிகழ்வில் மாணவா்கள், பெற்றோா் ஆா்வமுடன் கலந்து கொண்டனா். பள்ளி உதவி ஆசிரியா் மணிகண்டன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com