வைகையாற்றில் கூட்ட நெரிசல்: உதவி எண் அறிவிப்பு

கள்ளழகர் நிகழ்வில் வைகை ஆற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்ததையடுத்து மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 
வைகையாற்றில் கூட்ட நெரிசல்: உதவி எண் அறிவிப்பு
Published on
Updated on
1 min read

கள்ளழகர் நிகழ்வில் வைகை ஆற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்ததையடுத்து மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கூட்ட நெரிசலில் சிக்கி காணாமல் போனவர்கள் குறித்த விபரம் அல்லது வேறு ஏதேனும் விபரம் குறித்து அறிய மதுரை மாவட்ட மக்கள் செய்தித் தொடர்பு அலுவலரை 9498042434 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, கள்ளழகர் நிகழ்வில் வைகை ஆற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு ஆண், ஒரு பெண் என இருவர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். 

கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com