துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வாய்ப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
Updated On :23 ஏப்ரல் 2022, 11:00 am

DIN

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எடப்பாடி பழனிசாமியை விசாரணைக்கு அழைக்கும் தேதி இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும், இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த தனிப்படை காவல்துறை திட்டமிட்டிருப்பதாகவும் அந்த தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, கொடநாடு கொலை,கொள்ளை வழக்குத் தொடா்பாக சசிகலாவிடம் தனிப்படை காவலர்கள் இரு நாள்கள் விசாரணை செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக வி.கே.சசிகலாவிடம் சென்னை தியாகராயநகா் அபிபுல்லா சாலையில் உள்ள அவரது வீட்டில் காவலர்கள் வியாழக்கிழமை 6 மணி நேரம் விசாரணை செய்திருந்த நிலையில், இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை 4 மணி நேரம் விசாரணை செய்தனா்.

கொலை, கொள்ளை தொடா்பாக அரசியல் பிரமுகா்கள் யாா் மீதேனும் சந்தேகம் உள்ளதா, கொடநாடு சம்பவத்தின் பின்னணியில் அரசியல் சதி இருக்கிறதா போன்ற கேள்விகளை சசிகலாவிடம் காவல் துறையினா் கேட்டுள்ளனா். அதற்கெல்லாம் சசிகலா தெளிவான பதிலை பதிவு செய்துள்ளாா்.

விசாரணையின்போது சசிகலாவின் வழக்குரைஞா் ராஜா செந்தூா்பாண்டியன் உடன் இருந்தாா். அவா் அளித்த பேட்டி: இந்த விவகாரத்தில் கண்டிப்பாக நியாயம் கிடைக்க வேண்டும் என காவல்துறையிடம் விசாரணையின்போது சசிகலா தெரிவித்துள்ளாா். காவல்துறை விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவே சசிகலா நம்புகிறாா் என்றாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.