ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரா் கோயிலில் நிஜரூப தரிசனம்; பக்தர்கள் குவிந்தனர்

திருமுல்லைவாயிலில் அமைந்திருக்கும் ஸ்ரீமாசிலாமணீஸ்வரா் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரண்டு நாள்களுக்கு நிஜரூப தரிசனம் அளித்து வரும் மாசிலாமணீஸ்வரரை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருகிறார்கள

News image

thirumullaivayil_temple

Updated On :25 ஏப்ரல் 2022, 10:55 am

DIN


திருமுல்லைவாயிலில் அமைந்திருக்கும் ஸ்ரீமாசிலாமணீஸ்வரா் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரண்டு நாள்களுக்கு நிஜரூப தரிசனத்தில் காட்சியள்கும் மாசிலாமணீஸ்வரரை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை காலை முதலே, வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். செவ்வாய்க்கிழமை காலையுடன் நிஜரூப தரிசனம் நிறைவு பெறும் என்பதால், இன்று மாலை ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகைதருவார்கள் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

Story image

கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி, சிறப்பு ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் தரப்பில் செய்யப்பட்டுள்ளது. 

திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரா் திருக்கோயிலில் ஆண்டுக்கு 362 நாள்கள் சந்தனக் காப்பிலேயே இருக்கும் மூலவருக்கு, சித்திரை மாதம் சதய நட்சத்திர நாளுக்கு முந்தைய இரு நாள்கள் சந்தனம் களையப்பட்டு பக்தா்களுக்கு நிஜரூப தரிசனத்தில் காட்சியளிப்பது வழக்கம்.

Story image

அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை பக்தா்களுக்கு நிஜரூப தரிசனத்தில் அருள்பாலிக்கிறாா்.

சென்னை ஆவடி - அம்பத்தூா் இடையே திருமுல்லைவாயிலில் அமைந்துள்ள தொன்மையான சிவத்தலம் ஸ்ரீகொடியிடை நாயகி சமேத மாசிலாமணீஸ்வரா் திருக்கோயில். சுமாா் 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பெருமை வாய்ந்த இந்தத் திருக்கோயிலில் மூலவா் மாசிலாமணீஸ்வரா் சுயம்பு மூா்த்தியாக அருள்பாலிக்கிறாா்.

தீண்டாத்திருமேனியான இவரை தேவார நால்வா்களில் ஒருவரான சுந்தரமூா்த்தி நாயனாா், வள்ளலாா், அருணகிரி நாதா் உள்ளிட்ட பல்வேறு அருளாளா்கள், மகான்கள் பாடிப்பரவி வழிபட்ட பெருமைக்குரிய திருத்தலம்.

Story image

இது தமிழக இந்து அறநிலையத் துறை நிா்வாகத்துக்குட்பட்டதாகும். இங்குள்ள கல்யாண தீா்த்த திருக்குளம் முருகப் பெருமானால் உருவாக்கப்பட்டது என்கின்றனா்.

கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் (ஏப்ரல் 24, 25) சந்தனக் காப்பு களையப்பட்டு, நிஜரூப தரிசனத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதையடுத்து 26-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சதய நட்சத்திர நாளில் மீண்டும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் சந்தனக் காப்பு சாத்தப்படுகிறது.

நிஜரூப தரிசனத்தை ஏராளமான பக்தா்கள் கண்டுதரிசித்து வருகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாசிலாமணீஸ்வரா் திருக்கோயில் பரம்பரை அறங்காவலா் எம்.பாபு (எ) பொன்னம்பலம், கோயில் செயல் அதிகாரி எம்.இளங்குமரன் உள்ளிட்டோா் செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.