கோவையில் ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ கருப்பராயர் ஸ்ரீ குருசக்தி நாதர் திருக்கோயிலில் 13ஆம் ஆண்டு சித்திரை குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை மாவட்டம், கோவை புதூர் பகுதியில், அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ கருப்பராயர் ஸ்ரீ குருசக்தி நாதர் திருக்கோவில் குண்டம் திருவிழா கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றுதல், காப்புக் கட்டுதலுடன் துவங்கியது.
_.jpeg)
தொடர்ந்து, ஒவ்வொரு நாளும், குருதி பூஜை, சண்டி பூஜையைத் தொடர்ந்து, அபிஷேக ஆராதனைகள் உடன் குண்டம் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பிரத்தியங்கார தேவி ஹோமம் நடைபெற்றது. பின்னர் நாக பிள்ளையார் கோயிலிலிருந்து, பட்டு, படைக்கலன் உடன் அம்மன் புறப்பாடு விழாவைத் தொடர்ந்து, இறுதி நாளான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
_.jpeg)
கோவில் நிர்வாகி சித்தர் சாமி எனும் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், கோவை புதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பக்தர்கள், அக்னி சட்டி, பால்குடம், காவடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பக்தர்கள் 9 அடி மற்றும் 11 அடி நீள வேல்களை அலகு குத்தி பக்தியுடன் வந்தது பக்தர்களை மெய்சிலிர்க்கச் செய்தது. தாழத் தட்டுகளுடன், அம்மன் ரத ஊர்வலம் நடந்தது.
_.jpeg)
தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் அம்மனை பார்த்து வணங்கியபடியே குண்டம் இறங்கினர். பக்தர்கள் வழிபாடுகளின் இடையில், இரண்டு குதிரைகளும் குண்டத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தடைக்காலம் முடியும் முன் மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள்
கா்நாடகம்: அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரி அமைப்பு மீது யுஏபிஏ-இன் கீழ் வழக்குப் பதிவு

தவெக ஆட்சியில் மின்வெட்டால் மக்கள் அவதி! முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி!
இந்தியாவில் சீா்திருத்தங்கள் தொடரும்: பிரான்ஸ் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



