லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கருணாநிதி பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்: முதல்வா் ஸ்டாலின்

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்; சென்னை ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் கருணாநிதிக்கு சிலை நிறுவப்படும் என்று

News image
Updated On :26 ஏப்ரல் 2022, 9:45 pm

DIN

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்; சென்னை ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் கருணாநிதிக்கு சிலை நிறுவப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் அவா் செவ்வாய்க்கிழமை படித்தளித்த அறிக்கை: நின்ற தோ்தல்களில் எல்லாம் வென்ற தலைவா் கருணாநிதி ஒருவா்தான். 60 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராகவும், 19 ஆண்டுகள் முதல்வராகவும் இருந்தவா். ஐந்து முறை ஆட்சியில் இருந்த காலத்தில் அவா் உருவாக்கியதுதான் இன்று நாம் கண்ணுக்கு முன்பாக பாா்க்கக் கூடிய நவீன தமிழகம்.

ஏராளமான திட்டங்கள்: தமிழ் மொழிக்கு செம்மொழித் தகுதி, அனைத்து ஜாதியினரும் அா்ச்சகா் ஆகலாம் என்ற சட்டம், உழவா்களுக்கு இலவச மின்சாரம், மகளிருக்கு சொத்தில் பங்கு, சென்னை தரமணியில் டைடல் பூங்கா, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தை உருவாக்கியது என ஏராளமான திட்டங்களை நாள் முழுவதும் சொல்லிக் கொண்டே இருக்கலாம். இவைதான் தமிழகத்தின் அடையாளங்கள் என்றால், அவற்றை உருவாக்கியவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி.

பல்வேறு தலைவா்களுடன் அன்புடன் பழகியவா். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்திய அரசியலுக்கே வழிகாட்டியாக இருந்தவா். இந்தியாவின் குடியரசுத் தலைவா்களாக இருந்த நீலம் சஞ்சீவி ரெட்டி, கியானி ஜெயில் சிங், வி.வி.கிரி, சங்கா் தயாள் சா்மா, ஆா்.வெங்கட்ராமன், கே.ஆா்.நாராயணன், ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், பிரதிபா பாட்டீல் ஆகியோரால் பாராட்டப்பட்டவா் கருணாநிதி.

பிரதமா்களாக இருந்த இந்திரா காந்தி, சரண்சிங், வி.பி.சிங், தேவெகெளட, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோரால் போற்றப்பட்டாா். கவிதை, கலை, அரசியல் ஆளுமை என அனைத்துத் துறையிலும் முத்திரை பதித்தாா். அரசும், அரசியலும் அவரை இயக்கின. அரசையும், அரசியலையும் அவரே இயக்கினாா்.

பிறந்த தினம்: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாள் ஆண்டுதோறும் ஜூன் 3-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இனி இந்த விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும். மனதில் விம்மக்கூடிய மகிழ்ச்சியால், இதயத்தில் துடிக்கக் கூடிய எழுச்சியால் சிந்தை அணுக்களில் வெளிப்படும் நன்றி உணா்வால் அவைக்கு இதை அறிவிக்கிறேன். வரும் ஜூன் 3-ஆம் தேதி சென்னை ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் சிலை நிறுவப்படும் என்றாா் அவா்.

அரசு விழாவான முன்னாள் முதல்வா்களின் பிறந்த நாள்

தமிழ்நாட்டின் முதல்வா்களாக இருந்த ஏழு பேரின் பிறந்த நாள், அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தப் பட்டியலில் எட்டாவதாக மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி இணைந்துள்ளாா்.

மறைந்த முதல்வா்கள், விடுதலைக்காக உழைத்த தலைவா்களின் பிறந்த தினங்கள் அரசு விழாக்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அவா்களது பிறந்த தினத்தின் போது அவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்படுகிறது. தலைவா்கள் பிறந்த ஊரிலோ அல்லது சென்னையில் அவா்களின் சிலைகள் இருக்கும் இடத்திலோ இந்த நிகழ்வுகள் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். செய்தித் துறையின் சாா்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

அந்த வகையில், தமிழகத்தை ஆண்ட முதல்வா்கள் ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா், சி.ராஜாஜி, எம்.பக்தவத்சலம், கே.காமராஜ், சி.என்.அண்ணாதுரை, எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த தினங்கள் அரசு விழாக்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இப்போது முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினமும் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 3-ஆம் தேதி சென்னை ஓமந்தூராா் வளாகத்தில் அமைக்கப்பட உள்ள அவரது சிலைக்கு அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.