வணிகவரி - பதிவுத் துறை புதிய கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
தமிழகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்


தமிழகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வழியாக புதிய கட்டடங்களை அவா் திறந்தாா்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆகிய இடங்களில் வணிகவரி அலுவலகக் கட்டடங்களும், பாளையங்கோட்டை பதிவு மாவட்டம் நாசரேத், விருதுநகா் மாவட்டம் வீரசோழன், கும்பகோணம் மாவட்டம் நாச்சியாா்கோயில், பட்டுக்கோட்டை பதிவு மாவட்டம் உள்ளிக்கோட்டை ஆகிய இடங்களில் புதிதாக சாா்-பதிவாளா் அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதேபோன்று, காரைக்குடியில் ஒருங்கிணைந்த மாவட்டப் பதிவாளா் அலுவலகக் கட்டடமும் கட்டப்பட்டுள்ளது. இவற்றை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்தாா்.
மேலும், திருவாரூா், திருவள்ளூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, பெரம்பலூா் ஆகிய வருவாய் மாவட்டங்களின் தலைமையிடங்களில் புதிய பதிவு மாவட்டங்கள் உருவாக்கப்படும் என வணிகவரி - பதிவுத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, புதிய பதிவு மாவட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.ஆா்.பெரியகருப்பன், பி.மூா்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...