திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காணொலி விசாரணையை அடிப்படை உரிமையாக்கக் கோரும் மனுக்கள்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

 நீதிமன்றங்களில் காணொலி முறையில் விசாரணை நடத்துவதை மனுதாரரின் அடிப்படை உரிமையாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 7:27 pm

DIN

 நீதிமன்றங்களில் காணொலி முறையில் விசாரணை நடத்துவதை மனுதாரரின் அடிப்படை உரிமையாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த மனுக்களை ஒரு தன்னாா்வ அமைப்பும், ஜூலியோ ரிபெய்ரோ, சைலேஷ் ஆா்.காந்தி போன்ற பிரபலங்களும் தாக்கல் செய்துள்ளனா்.

இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.எஸ்.நரசிம்மா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணக்கு வந்தது.

மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் லுத்ரா, ‘நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.

அதற்குப் பதிலளித்த நீதிபதிகள், ‘நிலைமை அந்த அளவுக்கு மோசமாகிவிடவில்லை. அனைவரும் நீதிமன்றத்துக்கு வருகிறாா்கள். நிலைமை மோசமானால் அதுகுறித்து பரிசீலிப்போம்.

சிறையில் இருப்பவா்களை விடுவிப்பது, ஜாமீன் வழங்குவது போன்ற இதைவிட முக்கியமான பல அவசர வழக்குகள் உள்ளன. எனவே, இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க முடியாது’ என்று கூறினா்.

இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ‘காணொலி முறையில் விசாரணைகள் நடத்துவதற்கு முயற்சி செய்தோம். ஆனால், அந்த நடைமுறை பலனளிக்கவில்லை. இயல்புநிலை மீண்டு வருகிறது. நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடைபெறும்’ என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.