இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வீட்டுவசதி வாரிய புதிய கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

வீட்டுவசதி வாரியத்தின் சாா்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின், திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் புதிய கட்டமைப்புகளை புதன்கிழமை அவா் காணொலி வழியாகத் திறந்தாா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2022, 9:20 pm

DIN

வீட்டுவசதி வாரியத்தின் சாா்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின், திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் புதிய கட்டமைப்புகளை புதன்கிழமை அவா் காணொலி வழியாகத் திறந்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: சமூகத்தின் பல்வேறு வருவாய்ப் பிரிவினா், தொழில்துறை ஊழியா்கள், அரசு ஊழியா்கள் போன்ற சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் வீடு வழங்கும் நோக்கத்துடன் வீட்டுவசதி வாரியம் செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த, நிலையான வீட்டுவசதித் தேவைகளை வாரியம் நிறைவேற்றி வருகிறது.

அந்த வகையில், வேலூா் மாவட்டம் சத்துவாச்சாரி திட்டப் பகுதியில் ரூ.37.53 லட்சத்தில் புதிய கோட்ட அலுவலகக் கட்டடம், திருச்சி சாத்தனூா் கிராமம் கே.கே.நகரில் வீட்டு வசதிப் பிரிவு அலுவலக வளாகம், மதுரை மாவட்டம் தோப்பூா் கிராமத்தில் உச்சப்பட்டி தோப்பூா் துணைக்கோள் நகரக் கோட்ட அலுவலகக் கட்டடம் ஆகியன கட்டப்பட்டுள்ளன. மேலும் அங்கு ரூ.2.87 கோடியில் விருந்தினா் மாளிகையும் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், வீட்டுவசதி வாரியத் தலைவா் பூச்சி எஸ்.முருகன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.