நாளை மறுநாள் சுதந்திர தின விழா ஒத்திகை

நாளை மறுநாள்(ஆகஸ்ட் 6) சுதந்திர தின விழா ஒத்திகை சென்னை ராஜாஜி சாலையில் நடைபெற உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: நாளை மறுநாள்(ஆகஸ்ட் 6) சுதந்திர தின விழா ஒத்திகை சென்னை ராஜாஜி சாலையில் நடைபெற உள்ளது.

சென்னை ராஜாஜி சாலையில் ஆகஸ்ட் 6, 11, 13 ஆம் தேதிகளில் சுதந்திர தின விழா ஒத்திகை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் காலை 8 மணிக்கு சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சென்னை ராஜாஜி சாலையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் சுதந்திர தினத்தன்று அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வது வழக்கம்.

ஆனால், கரோனா நோய்ப் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுதந்திர தினவிழாவில் மக்கள் பங்கேற்க தமிழக அரசு தடை விதித்திருந்தது.

இந்நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com