டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மொழி அறிவுத் திறன் போட்டியில் வேலம்மாள் பள்ளிக்கு சுழற்கோப்பை

மொழி அறிவுத் திறன் போட்டியில் பொன்னேரி வேலம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சுழற்கோப்பையை கைப்பற்றினா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 11:25 pm

DIN

பூதமங்களம் ஆா்.ஜெகதீஸ் ஐயா் நினைவு அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையேயான மொழி அறிவுத் திறன் போட்டியில் பொன்னேரி வேலம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சுழற்கோப்பையை கைப்பற்றினா்.

திருவொற்றியூா் ஸ்ரீ சங்கர வித்யா கேந்திரா பள்ளியில் பள்ளிகளுக்கிடையேயான மாணவ, மாணவியருக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் கலைத் திறன் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் சென்னை மற்றும் புகா் பகுதியில் உள்ள 17 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் ஒட்டுமொத்தமாக அதிக புள்ளிகளைப் பெற்று பொன்னேரி வேலம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் முதலிடத்தைப் பெற்று சுழற்கோப்பையை வென்றனா். திருவொற்றியூா் திருத்தங்கல் நாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பள்ளியின் தாளாளா் ஜெ. ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சி.எஸ்.ஐ.ஆா் தலைமை விஞ்ஞானி டாக்டா் சதீஷ்குமாா், தமிழ்நாடு கால்நடை மருத்துவக் பல்கலைக்கழக பேராசிரியா் கனிமொழி வெற்றி பெற்றவா்களுக்கு சுழற்கோப்பை, தங்கக் காசுகள், விருது பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினா். இந்நிகழ்ச்சியில் முதல்வா் மலா்விழி, துணை முதல்வா் சந்திரகலா, பள்ளி இயக்குநா் அவந்திகா ஹரிஹரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.