மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அதிமுக அலுவலக சாவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் கேவியட் மனு தாக்கல்

அதிமுக அலுவலக சாவி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் ஓ. பன்னீா்செல்வம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், எடப்பாடி கே.பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 5:02 pm

 நமது நிருபர்

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி அதன் சாவியை எடப்பாடி கே. பழனிசாமி தரப்பினரிடம் ஒப்படைக்க சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து ஓ. பன்னீா்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், எடப்பாடி கே.பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளாா்.

உயா்நீதிமன்ற அனுமதியின் பேரில் கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னையில் அதிமுக பொது குழு கூட்டம் நடைபெற்றது. இதனிடையே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆா் மாளிகைக்கு ஓ. பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் சென்றனா். அப்போது, ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தை தொடா்ந்து, கட்சியின் அலுவலகத்திற்கு வருவாய்த் துறையினா் சீல்வைத்தனா்.

இதையடுத்து, கட்சித் தலைமை அலுவலகத்திற்கு உரிமை கோரி எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் ஓ.பன்னீா்செல்வம் தரப்பினா் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கில் உயா்நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமாா், கடந்த ஜூலை 20-ஆம் தேதி அளித்த உத்தரவில், ‘அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றி அதன் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் வருவாய்த்துறை ஒப்படைக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.

சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிா்த்து ஓ. பன்னீா்செல்வம் உச்சநீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த நிலையில், எடப்பாடி கே.பழனிசாமி இந்த மேல் முறையீட்டு விவகாரத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளாா். வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன் மூலம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், ‘இந்த மேல்முறையீட்டு வழக்கில் தங்கள் தரப்பு கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது’ என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.