பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா: பதக்கங்களை முதல்வர் வழங்குகிறார்

44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா இன்று (ஆக.9) மாலை  நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :9 ஆகஸ்ட் 2022, 10:26 am IST

சென்னை:  44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா இன்று (ஆக.9) மாலை  நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 6 மணிக்கு நடக்கிறது.

போட்டியில் வெற்றி பெற்றோருக்கு விழாவில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச் விழாவில் பங்கேற்கின்றனர்.

நிறைவு விழாவில் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னைக்கு அருகேவுள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில், 187 நாடுகளைச் சோ்ந்த 2,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 

முன்னதாக, நேரு உள்விளையாட்டரங்கில் நிறைவு விழா நடைபெறுவதையொட்டி,  நேற்று (ஆக.8) காலை தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.