அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

போதைப்பொருள் சங்கிலியை உடைக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

போதைப்பொருள் கொண்டு செல்லப்படும் சங்கிலியை எப்படியாவது உடைக்க வேண்டும் என  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 12:16 pm IST

சென்னை: போதைப்பொருள் கொண்டு செல்லப்படும் சங்கிலியை எப்படியாவது உடைக்க வேண்டும் என  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் "போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு" திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்து உரையாற்றினார். மேலும் அவர் ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

போதைப்பொருள் பயன்படுத்துவோர் அதில் இருந்து மீள முடியாத அளவுக்கு சென்றுவிடுகின்றனர். போதைப்பொருள் பயன்படுத்துவோரை திருத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. 

போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்க இரு வழிகள் உள்ளன. போதை மருந்து நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது. அதனை விற்பவர்களை கைது செய்வது ஒரு வழி. போதைபொருளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறி அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்துவது 2வது வழி.

பொதுமக்களும் இனைந்து செயல்பட்டால்தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

எனது காவல் எல்லையில் போதைப்பொருள் விற்பனையை தடுத்துவிட்டேன் என்று ஒவ்வொரு ஆய்வாளரும் உறுதி எடுக்க வேண்டும். கஞ்சா விளைவிப்பதை முற்றிலுமாக தடுத்து நிறுத்தியாக வேண்டும். மலையடிவாரங்களை கண்காணிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மேலும், போதைப்பொருள் கொண்டு செல்லப்படும் சங்கிலியை எப்படியாவது உடைக்க வேண்டும் என  முதல்வர் மு.க.ஸ்டாலின்  வலியுறுத்திக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.