சென்னை: போதைப்பொருள் கொண்டு செல்லப்படும் சங்கிலியை எப்படியாவது உடைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் "போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு" திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்து உரையாற்றினார். மேலும் அவர் ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
போதைப்பொருள் பயன்படுத்துவோர் அதில் இருந்து மீள முடியாத அளவுக்கு சென்றுவிடுகின்றனர். போதைப்பொருள் பயன்படுத்துவோரை திருத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்க இரு வழிகள் உள்ளன. போதை மருந்து நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது. அதனை விற்பவர்களை கைது செய்வது ஒரு வழி. போதைபொருளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறி அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்துவது 2வது வழி.
பொதுமக்களும் இனைந்து செயல்பட்டால்தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
எனது காவல் எல்லையில் போதைப்பொருள் விற்பனையை தடுத்துவிட்டேன் என்று ஒவ்வொரு ஆய்வாளரும் உறுதி எடுக்க வேண்டும். கஞ்சா விளைவிப்பதை முற்றிலுமாக தடுத்து நிறுத்தியாக வேண்டும். மலையடிவாரங்களை கண்காணிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேலும், போதைப்பொருள் கொண்டு செல்லப்படும் சங்கிலியை எப்படியாவது உடைக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


