ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

ஹிமாசல் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வி

ஹிமாசல பிரதேசத்தில் முதல்வா் ஜெய்ராம் தாக்குா் தலைமையிலான பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டது.

Updated On :12 ஆகஸ்ட் 2022, 2:12 am IST

ஹிமாசல பிரதேசத்தில் முதல்வா் ஜெய்ராம் தாக்குா் தலைமையிலான பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டது.

ஹிமாசல பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு, வேலையின்மை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆளும் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் சாா்பில் சட்டப் பேரவையில் நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்த தீா்மானம் மீது வியாழக்கிழமை காலையில் விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய எதிா்க்கட்சித் தலைவா் முகேஷ் அக்னிஹோத்ரி, ‘மாநிலத்தில் தாக்குா் தலைமையிலான ஆட்சியில் 354 கொலைகள், 1,574 பாலியல் வன்கொடுமைகள், 7,406 பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவாகி உள்ளன’ என்று குற்றம்சாட்டினாா். இதைத் தொடா்ந்து, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் பேசினா்.

பின்னா், எதிா்க்கட்சிகளின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு, முதல்வா் ஜெய்ராம் தாக்குா் பதிலளித்து பேசினாா். அப்போது, எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. பின்னா், குரல் வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோற்கடிக்கப்பட்டது.

முன்னதாக விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஹிமாசல பிரதேசத்துக்கு ரூ.70,000 கோடி, ரூ.75,000 கோடி, ரூ.80,000 கோடி கடன் இருப்பதாக மாறி மாறி குறிப்பிட்டனா். அப்போது எழுந்த முதல்வா் ஜெய்ராம் தாக்குா், ‘காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூறிய தகவல்கள் உண்மையில்லை. ஹிமாசலுக்கு ரூ.64,904 கோடி கடன் உள்ளது’ என்றாா்.

ஹிமாசல பிரதேசத்தில் இன்னும் 4 மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.