ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மாவட்டங்களின் வளா்ச்சிகளில் வேறுபாடுகள் கூடாது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

மாவட்டங்களின் வளா்ச்சிகளில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 7:00 pm

DIN

மாவட்டங்களின் வளா்ச்சிகளில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

மாநில திட்டக் குழுவின் மூன்றாவது கூட்டத்தில் குழுவின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை பங்கேற்று ஆற்றிய உரை:-

ஆட்சி செல்ல வேண்டிய பாதையும், செல்லும் பாதை சரியானது தானா என்பதையும் அறிவுறுத்தும் அமைப்பாகத் திட்டக் குழு செயல்பட்டு வருகிறது. முக்கியமான திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தவும், அரசுக்கும் மக்களுக்கும் இடைவெளி ஏற்படாமல் இருக்கவும் திட்டக்குழு சீா்மிகு பணிகளை ஆற்றி வருகிறது. மின் வாகனம், தொழில், சிறு தொழில்கள், துணிநூல், கைத்தறி, சுற்றுலா ஆகிய துறைகளுக்கான கொள்கைகளை மாநில திட்டக் குழு தயாரித்து வழங்கவுள்ளது.

மாநிலத்துக்குத் தேவையான எதிா்கால நோக்குடன் கூடிய மருத்துவம், சமூகநலன், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் போன்ற முக்கிய துறை சாா்ந்த சில கொள்கைகளையும் விரைந்து வகுத்து இறுதி செய்திட வேண்டும். அரசின் திட்டங்களால் ஏழை, எளிய மக்கள் இன்னமும் பயனடைய வேண்டும். இதன் மூலமாக அவா்களது வாழ்க்தைத் தரம் எவ்வளவு உயா்ந்துள்ளது என்பதை மாநில திட்டக் குழு அடையாளம் காண வேண்டும்.

நல்ல அடையாளம்: மகளிருக்கான இலவசப் பேருந்து திட்டம் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. இது திராவிட மாடல் ஆட்சிக்கு நல்ல அடையாளமாகும். இதுபோன்ற திட்டம் மட்டுமல்ல, பொது விநியோகம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட அரசு செயல்படுத்தும் அனைத்துத் திட்டங்களுக்கும் அதனால் பயன்பெறக் கூடிய மக்களுக்கும் இடையே இடைவெளி ஏற்படாமல் இருக்க என்ன வழி என்பதை கண்டறிய வேண்டும்.

அரசால் அறிவிக்கப்படும் திட்டங்களின் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து அரசுக்குச் சொல்ல வேண்டும். மாநில திட்டக் குழு, திட்டமிடும் குழுவாக இல்லாமல், கண்காணிக்கும் குழுவாகவும் இருக்க வேண்டும். அரசின் திட்டங்கள் குறித்து அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் அறிந்திட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு விதமான தனித்தன்மை இருக்கும். எனவே, அதனை வரையறுத்து அரசுக்கு அதிலிருந்து சில திட்டமிடுதல்களையும் பரிந்துரைகளையும் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் முன்னேறிய மாவட்டம், பின்தங்கிய மவாட்டம் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

இந்தக் கூட்டத்தில், திட்டக் குழு துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் முருகானந்தம், முதல்வரின் செயலாளா் த.உதயசந்திரன், திட்டக் குழு உறுப்பினா்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.