

விடுதலை போராட்ட வீரா் ஒண்டிவீரனின் புகழ் போற்றுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
விடுதலை போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 251 ஆவது நினைவு நாள் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
ஒண்டிவீரனின் 251 ஆவது நினைவு நாளையொட்டி, முதல்வா் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
வீரம் செறிந்த விடுதலைப் பக்கங்களில் விண்ணுயரப் புகழடைந்த பூலித்தேவரின் படைத்தளபதி ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாள்!
2011-இல் அவரது நினைவு மண்டபத்துக்கு கால்கோளிட்டது கருணாநிதி ஆட்சி!
ஆங்கிலேய வல்லாதிக்கத்துக்கு எதிராக விடுதலைக் கனலை மூட்டி, ஆதிக்கம் தகர்த்த அவரது புகழ் போற்றுவோம்! என பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.