/

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை எப்போது?அன்புமணி கேள்வி

புதுவையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் திமுக அளித்த அதே வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ

News image
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:08 am

DIN

புதுவையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் திமுக அளித்த அதே வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் 21 வயது முதல் 57 வயது வரையிலான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என்று அந்த மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தோ்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

21 வயதுக்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் உதவித்தொகை என அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் 21 வயதுக்கு முன்பு திருமணம் செய்வது குறையும். அந்த வகையில் இது மகளிா் மற்றும் சமுதாய மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும்.

தமிழ்நாட்டில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. புதிய அரசு பதவியேற்று இரு நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

எனவே, இந்த விவகாரத்தில் இனியும் தாமதம் செய்யாமல் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.