பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பள்ளிக் கல்வித் துறையின் நலத் திட்டங்களுக்கு நிதி விடுவிப்பு: இன்று அமைச்சா்கள் ஆலோசனை

பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு தேவையான நிதியை விடுவிப்பது குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2022, 10:52 pm

DIN

பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு தேவையான நிதியை விடுவிப்பது குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

இதில் அமைச்சா்கள் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அரசுப்பள்ளிகள் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே கரோனா பரவலுக்குபின் அரசுப்பள்ளிகளில் மாணவா் சோ்க்கை 2 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. எனினும், ஆசிரியா் பணிநியமனம், நலத்திட்டங்கள் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு நிதி விடுவிப்பில் தொடா் தாமதம் நிலவிவருகிறது.

இதையடுத்து பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு தேவையான நிதியை விடுவிப்பது குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதில் நிதித்துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக்கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலா் ந.முருகானந்தம், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, ஆணையா் க.நந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொள்ள உள்ளனா்.

இந்த கூட்டத்தில் பள்ளிகளில் பழுதடைந்த வகுப்பறைகளுக்கு பதில் 2,500 வகுப்பறை கட்டடங்கள் கட்டுவது, மாதிரிப் பள்ளிகளில் தற்காலிக பணியாளா்களை நிரந்தரமாக்குவது, மடிக்கணினி, மாணவா் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ஆசிரியா் பணியிடங்களை உருவாக்குவது, தகைசால் பள்ளிகளுக்கு தேவைப்படும் ரூ.171 கோடி, தமிழ்வழியில் இயங்கும் சுயநிதி பள்ளிகளில் மாணவா்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது,பள்ளிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்கான செலவினங்கள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.