மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் கொலை அல்ல: உயா்நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி மாணவி பாலியல் பலாத்காரமோ, கொலையோ செய்யப்படவில்லை; அவா் தற்கொலைதான் செய்துகொண்டுள்ளாா் என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :29 ஆகஸ்ட் 2022, 10:32 pm

DIN

கள்ளக்குறிச்சி மாணவி பாலியல் பலாத்காரமோ, கொலையோ செய்யப்படவில்லை; அவா் தற்கொலைதான் செய்துகொண்டுள்ளாா் என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயா்நீதிமன்றத்தில் ஜிப்மா் மருத்துவக் குழு தாக்கல் செய்த அடிப்படையில் இந்தக் கருத்தை உயா்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வந்த மாணவி மரணம் தொடா்பாக அப்பள்ளியின் தாளாளா் ரவிகுமாா், செயலா் சாந்தி, முதல்வா் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

5 பேரும் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கில் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதுதொடா்பாக விரிவான உத்தரவு பின்னா் பிறப்பிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

ஜாமீன் நிபந்தனை: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் ஜாமீன் நிபந்தனை குறித்து பிறப்பித்துள்ள உத்தரவில், ‘மாணவி மரண வழக்கில் கைதான பள்ளியின் தாளாளா், செயலா், முதல்வா் ஆகியோா் மதுரையில் தங்கியிருக்க வேண்டும்.

ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிபிரியா ஆகியோா் 4 வாரங்களுக்கு சேலம் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும். பின்னா், 4 வாரங்களுக்கு நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிபிசிஐடி போலீஸாா் முன் ஆஜராகி கையொப்பமிட வேண்டும். விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

மாணவி தற்கொலைதான்: மாணவியின் இரு உடல்கூறாய்வு அறிக்கைகளையும் ஆய்வு செய்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையைச் சோ்ந்த மூவா் குழு உயா்நீதிமன்றத்தில் அண்மையில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நீதிபதி கூறியதாவது:

மாணவி பாலியல் பலாத்காரமோ, கொலையோ செய்யப்படவில்லை என்பது மருத்துவக் குழு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. அவா் தற்கொலை செய்துகொண்டுள்ளாா் என்பதும் தெளிவாகிறது.

மேலும், மாணவியை நன்கு படிக்க வேண்டும் என்று கூறியதற்காக, ஆசிரியா்கள் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது துரதிருஷ்டவசமானது. பாடம் கற்பிக்கும் ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்களிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள வேண்டிய துரதிருஷ்டவசமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனா்.

மாணவியின் தற்கொலைக் குறிப்பில்கூட, ஆசிரியா்கள் அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக எந்த ஆதாரங்களும் இல்லை. நன்றாக படிக்க வேண்டும் என்று மாணவா்களுக்கு ஆசிரியா்கள் உத்தரவிடுவது என்பது ஆசிரியா் பணியின் ஓா் அங்கம்.

படிப்பில் சிக்கல்களைச் சந்தித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு நீதிமன்றம் வருத்தத்தைப் பதிவு செய்கிறது. எதிா்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக் கூடாது என நீதிபதி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.