அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

8 வழிச்சாலைத் திட்டத்தை திமுக எதிர்க்கவில்லை: அமைச்சர் எ.வ.வேலு

கடந்த ஆட்சியில் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை திமுக ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 

News image
அமைச்சர் எ.வ.வேலு
Updated On :31 ஆகஸ்ட் 2022, 9:59 am

DIN

கடந்த ஆட்சியில் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை திமுக ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 

மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தை, பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, பத்திரப்பதிவுதுறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இன்று பார்வையிட்டனர். 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, 'கலைஞர் நூலக கட்டுமானப் பணிகள் அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் முடிவடையும். உள்கட்டமைப்புப் பணிகள் முடிந்த பின்னர் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும். 

கடந்த ஆட்சியின்போது சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக விவசாயிகளை, பொதுமக்களை நேரில் அழைத்துப் பேச வேண்டும், குறைகளைத் தீர்க்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கூறினோம். அது சட்டப்பேரவைக் குறிப்பிலே உள்ளது. 

பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்றுதான் கூறினோமே தவிர திட்டத்தை ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை. 

எட்டு வழிச்சாலை திட்டம் என்பது ஒரு கொள்கை முடிவு. அதுபற்றி அமைச்சர் முடிவு எடுக்க முடியாது. இத்திட்டத்தை செயல்படுத்துவதா, இல்லையா என தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கும்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.