அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மதுரையில் பள்ளிகளுக்கிடையேயான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள்!

மதுரை கோச்சடை தனியார்  பள்ளியில் அரசு பள்ளி, மாநகராட்சி பள்ளிகளில் படிப்பவர்கள் உள்ளிட்ட மாணவ, மாணவியர்களுக்கு இடையேயான கலை மேம்பாட்டுத் திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. 

News image
Updated On :1 டிசம்பர் 2022, 11:09 am

DIN

மதுரை கோச்சடை தனியார்  பள்ளியில் அரசு பள்ளி, மாநகராட்சி பள்ளிகளில் படிப்பவர்கள் உள்ளிட்ட மாணவ, மாணவியர்களுக்கு இடையேயான கலை மேம்பாட்டுத் திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. 

வெற்றி பெற்ற 100 பேரை இஸ்ரோவிற்கு குயின் மீரா பள்ளி நிர்வாகத்தினர் இலவசமாக அழைத்துச் செல்கிறார்கள் 

மதுரை தனியார் பள்ளி சார்பில் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2 தினங்கள் பள்ளி வளாகத்தில் நடந்தது.

மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. என மொத்தம் 200 பள்ளிகளிலிருந்து பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இவர்களுக்கு ஓட்டப்பந்தயம், குண்டு எரிதல், சிலம்பம், நடனம், பாட்டு, ஓவியப்போட்டி, மாறுவேட போட்டி உள்ளிட்ட 25 தலைப்புகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 

போட்டிகளின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைவர் டாக்டர் சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளியின் நிர்வாக இயக்குனர் அபிநாத் சந்திரன் முன்னிலை வகித்தார். கல்வி இயக்குனர் சுஜாதா குப்தன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் அப்துல்கலாம் விஷன் 2020 அமைப்பின் தலைவர் திருச்செந்தூரான், செல்லமுத்து அறக்கட்டளை இயக்குனர் டாக்டர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். 

இந்த போட்டிகள் குறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், வருடம் தோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடங்களை ஒப்பிடும்போது இந்த வருடம் அதிகளவிலான பள்ளிகளில் இருந்து சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமாக மாணவ மாணவிகள், கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 

மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகப் போட்டியில் வெற்றி பெற்றவர்களில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு (இஸ்ரோ) அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர். இதுபோல் அடுத்த வருடத்தில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் 500 மாணவ, மாணவிகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.