சென்னைக்கு 770 கி.மீ தொலைவில் காற்றழுத்தத் தாழ்வுமண்டலம்: இன்று மாலை உருவாகிறது புயல்!

சென்னையிலிருந்து 770 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
சென்னைக்கு 770 கி.மீ தொலைவில் காற்றழுத்தத் தாழ்வுமண்டலம்: இன்று மாலை உருவாகிறது புயல்!

சென்னையிலிருந்து 770 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

சென்னையில் இருந்து 770 கி.மீ தொலைவில் கிழக்கு தென் கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைக்கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை நெருங்கிவரும் ஆழ்ந்தத் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலையில் புயலாக மாறும். மணிக்கு 15 கி.மீ வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. 

இது புயலாக வலுப்பெற்று நாளை காலை வடதமிழகம் புதுச்சேரி ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com