அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மதுரையில் கடையடைப்புப் போராட்டம்! 60% கடைகள் மூடல்

மதுரை மாட்டுத்தாவணி காய்கறிக் கடைகளின் வாடகை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 60 சதவீத கடைகள் இன்று மூடப்பட்டுள்ளன. 

News image
மதுரையில் மூடப்பட்டிருந்த கடைகள்
Updated On :7 டிசம்பர் 2022, 6:27 am

DIN

மதுரை மாட்டுத்தாவணி காய்கறிக் கடைகளின் வாடகை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 60 சதவீத கடைகள் இன்று மூடப்பட்டுள்ளன. 

மதுரை மாநகராட்சி சார்பில் மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் சந்தை இயங்கி வருகிறது. இச்சந்தையில் உள்ள 1,836 கடைகளில் வியாபாரிகள், தொழிலாளர்கள் என 10,000-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இந்த சந்தைக்கு ஆந்திரம், கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 1,000 டன் காய்கறிகள் விற்பனைக்காக வருகிறது. 

தற்போது மதுரை மாநகராட்சி இக்கடைகளின் வாடகையினை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக 4 சங்கங்களின் சார்பில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. கடைகளின் வாடகை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 60 சதவிகித கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் 40 சதவீத வியாபாரிகள், கடைகளைத் திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர். சில்லறை வணிகம், பழங்கள் விற்பனை கடைகள் வழக்கம் போல இயங்குகின்றன. அவர்களும் வாடகை உயர்வு, ஜிஎஸ்டி வரி என பல பிரச்னைகள் இருந்தாலும் மாநகராட்சி நிர்வாகம் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்ற நம்பிக்கையில் கடையை திறந்திருப்பதாகத் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.