திருவள்ளூர்: தொடர் மழை எதிரொலியால் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை(டிச.12) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: மாண்டஸ் புயலால் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க | பெண்களை சக்கரவர்த்தினியாக பெருமைப்படுத்தியவர் பாரதி!
இந்த மழையால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.