திருவண்ணாமலை மாவட்டம் ஒரந்தவாடி கிராமத்தில் மனைவி, 5 குழந்தைகளை வெட்டிக் கொலை செய்துவிட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத் தகராறில் மனைவி, குழந்தைகளை வெட்டிக் கொலை செய்துவிட்டு பழனி என்பவர் தற்கொலை செய்துகொண்டார்.
இதையும் படிக்க: அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது!
மனைவி வள்ளி, மகள்கள் த்ரிஷா (15), மோனிகா (14), சிவசக்தி (6), மகன் தனுஷ் (4) கொலை செய்துவிட்டு பழனி தற்கொலை செய்து கொண்டார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 9 வயது பூமிகா, அரசு மருவத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல் துறையினர் 5 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.