சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன் உள்பட 5 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேயர் ஜெகன் உள்ளிட்டோரையும் வழக்கில் இருந்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் விடுவித்துள்ளது. 1996-2001 காலகட்டத்தில் அதிகமாக ரூ.2.31 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் கீதா ஜீவன் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதையும் படிக்க: 'காசேதான் கடவுளடா’ விரைவில் துணிவு படத்தின் அடுத்த பாடல்..
இந்நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதா ஜீவனை விடுவித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.