தூத்துக்குடியில் 5 மாத குழந்தையை விற்க முயற்சி: 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது

தூத்துக்குடியில் சட்ட விரோதமாக 5 மாத குழந்தையை விற்க முயற்சித்த 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
தூத்துக்குடியில் 5 மாத குழந்தையை விற்க முயற்சி: 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது

தூத்துக்குடி:  தூத்துக்குடியில் சட்ட விரோதமாக 5 மாத குழந்தையை விற்க முயற்சித்த 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 5 மாத பெண் குழந்தையை  சட்டவிரோதமாக விற்பனை செய்ய இருப்பதாக போலீசாருக்கு செவ்வாய்க்கிழமை (டிச.20) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் ஆய்வாளர் ராஜாராம் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது, தூத்துக்குடி- பாளையங்கோட்டை பிரதான சாலை அருகே உள்ள ஒரு கோவிலின் முன்பு சந்தேகத்திற்கிடமான முறையில் கையில் 5 மாத பெண் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், தூத்துக்குடி டி.என்.எச்.பி காலனியை சேர்ந்த சித்திரைவேல் மகன் மாரியப்பன் (44), மேற்படி குழந்தையின் தாயான கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த கலைவாணர் என்பவரது மனைவி மாரீஸ்வரி (22), இவரது தாயார் சிவசங்கர் மனைவி அய்யம்மாள் (40) மற்றும் தூத்துக்குடி 3 ஆவது மைல் திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்த சங்கர் மனைவி சூரியம்மா (எ) சூரம்மா (75) ஆகியோர் என்பதும் இவர்கள் சட்டவிரோதமாக குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்து செய்த போலீசார், அவர்களிடமிருந்து குழந்தையை மீட்டு தூத்துக்குடியிலுள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர். மேலும், இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com