ரூ. 41 ஆயிரத்தை எட்டிய தங்கம் விலை! வெள்ளி கிலோவுக்கு ரூ. 2,200 உயர்வு!!

சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 41 ஆயிரத்தை எட்டியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 41 ஆயிரத்தை எட்டியுள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக டிச. 14 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ. 40,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

அதன்பின்னர் படிப்படியாக குறைந்து நேற்று(டிச.20) ஒரு சவரன் தங்கம் ரூ. 40,520-க்கு விற்பனையானது. 

இந்நிலையில் இன்று(டிச. 21, புதன்கிழமை) சவரனுக்கு மேலும் ரூ. 400 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 40,920 -க்கு விற்பனையாகிறது. இதன்மூலமாக 22 காரட் ஒரு சவரன் தங்கம் ரூ. 41 ஆயிரத்தைத் தொட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5,115 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதேபோல, வெள்ளி விலையும் இன்று கடுமையாக அதிகரித்துள்ளது. கிலோவுக்கு ரூ.2,200 அதிகரித்து ரூ.74,700-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2.20 அதிகரித்து ரூ.74.70--க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com