நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை! தமிழக அரசு கடிதம்

சீனா, ஹாங்காங்கிலிருந்து தமிழகம் வருவோருக்கு கரோனா பரிசோதனை குறித்து மத்திய சுகாதாரத் துறைக்கு மாநில சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :21 டிசம்பர் 2022, 4:08 pm

DIN


சீனா, ஹாங்காங்கிலிருந்து தமிழகம் வருவோருக்கு கரோனா பரிசோதனை குறித்து மத்திய சுகாதாரத் துறைக்கு மாநில சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது.

சீனாவில் புதிய வகை கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மாநில சுகாதாரத் துறை இந்த கடிதத்தை எழுதியுள்ளது.  

இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள கடிதத்தில், 

மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து தமிழகம் வருவோருக்கு விமான நிலையங்களில் கரோனா பரிசோதனையை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். 

கரோனா பரிசோதனை மாதிரிகளில் கரோனா இருப்பது உறுதியானால் அவர்களை தனிமைப்படுத்திக் கண்காணிக்க வேண்டும்.

மேலும், கரோனா பரிசோதனைக்கு உரிய வழிகாட்டுதல் முறைகளை வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் மாநில அரசு கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குஜராத்தில் பிஎஃப் 7 மற்றும் பிஎஃப் 12 என்ற இரண்டு திரிபு வகை கரோனா இருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.