அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காஞ்சிபுரத்தில் புத்தகத் திருவிழா: அமைச்சர் தா.மோ. அன்பரசன்  தொடக்கி வைத்தார் 

காஞ்சிபுரத்தில் புத்தகத் திருவிழாவை அமைச்சர் தா.மோ. அன்பரசன் இன்று குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார்.

News image
காஞ்சிபுரத்தில் புத்தகத் திருவிழா: அமைச்சர் தா.மோ. அன்பரசன்  தொடக்கி வைத்தார் 
Updated On :23 டிசம்பர் 2022, 10:30 am

DIN


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் புத்தகத் திருவிழாவை அமைச்சர் தா.மோ. அன்பரசன் இன்று குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார்.
                                 
காஞ்சிபுரத்தில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் முதல் முதலாக புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் ஜனவரி 2ஆம் தேதி வரை தொடர்ந்து பத்து நாள்களுக்கு நடைபெறுகிறது. 

புத்தகத் திருவிழாவை அமைச்சர் தா.மோ. அன்பரசன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் கா. சுந்தர், சிவிஎம்பி எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி வரவேற்று பேசினார். பபாசி தலைவர் எஸ் வைரவன் விழாவை அறிமுகம் செய்து வைத்து பேசினார். புத்தகத் திருவிழாவை முன்னிட்டு 100 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

தொடக்க விழாவில் எஸ்.பி.எம். சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவ.ருத்ரய்யா, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார் ஆகியோர் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விழாவை முன்னிட்டு வரும் இரண்டாம் தேதி வரை தினசரி இரவு பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நட்சத்திர பேச்சாளர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும் பொது நூலக துறையும் இணைந்து செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.