நெய்வேலி: கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே செவ்வாய்க்கிழமை இரவு அரசுப் பேருந்து மோதியதில் 91 செம்மறி ஆடுகள் பலியான நிலையில், அதனை ஓட்டி வந்த இளைஞரும் உடல் நசங்கி உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், காளையார் கோயில் காசிநாதனும், மகன் லட்சுமணனும் தங்களுக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை ஊர் ஊராக ஓட்டிச் சென்று கிடை கட்டுவது வழக்கம்.
செவ்வாய்க்கிழமை இரவு காசிநாதன் தனக்கு சொந்தமான 300 ஆடுகளை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டிச் சென்றார். லட்சுமணன் ஆடுகளை அடைக்க பயன்படும் வலைகளை இரு சக்கர வாகனத்தில் வைத்து ஓட்டிச் சென்றார்.
இவர்கள், வேப்பூர் அடுத்துள்ள சேப்பாக்கம் கோமகி ஆற்றுப் பாலத்தில் அருகே இரவு 11.30 மணி அளவில் ஆடுகளை ஓட்டிச் சென்றபோது, அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் லட்சுமணன் மற்றும் 91 ஆடுகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் போலீசார் லட்சுமணன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சாலையில் கிடந்த ஆடுகள் அப்புறுப்படுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் 2026: தமிழ்நாட்டில் தவெக ஆட்சி? - நேரலை...
பட்டுக்கோட்டையை திமுக தக்கவைத்தது; கா. அண்ணாதுரை வெற்றி

மன்னாா்குடி தொகுதியில் அமமுக வேட்பாளா் எஸ். காமாராஜ் வெற்றி!
இன்றைய ராசி பலன் (05.05.2026) - சிம்மம்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


