தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பிரதமர் மோடி தாயார் மறைவு: தெலங்கானா ஆளுநர் தமிழிசை இரங்கற்பா

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 ஜனவரி 2023, 5:33 am

DIN


பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று(டிச.30) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 100. 

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்  வெளியிட்டுள்ள இரங்கற்பா, 

மழலையாய் பிறந்த மகனை...
பிறர் மலைப்புற வளர்த்து... உறுதியான
மலை என பொது வாழ்க்கையில்
உயரச் செய்து... உலகிலேயே
உயர்ந்த மனிதராய் உயர்த்தி
தன் தள்ளாத வயதிலும்... தளர்வில்லா 
வலிமையை... உலகின் 
வலிய தலைவராம்...நம்
பிரதமருக்கு.. தற்போது மட்டுமல்ல
பிறந்ததிலிருந்து... அளித்துவந்த
அன்னை தீபம் அணைந்து விட்டது
எங்கள் பிரதமரின் அன்பு வெள்ளம் மறைந்ததைக் கேட்டு
எங்கள் கண்களில் கண்ணீர் வெள்ளம்
எதையும் தாங்கும்
எப்போதும் உள்ள உறுதியை
இப்போதும் நம் இறைவன் நம்
பிரதமருக்கு அருளட்டும்...

என்று தனது ஆழ்ந்த இரங்கலை தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.