ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புத்தாண்டு: திருநள்ளாறு கோயிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் 

புத்தாண்டு பிறப்பு மற்றும் சனிக்கிழமையென்பதால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

News image
Updated On :31 டிசம்பர் 2022, 3:29 am

DIN


காரைக்கால் : புத்தாண்டு பிறப்பு மற்றும் சனிக்கிழமையென்பதால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் தனி சந்நிதி கொண்டுள்ளார்.

இக்கோயிலில் வாக்கியப் பஞ்சாங்கப்படியே பூஜைகள் நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சி விழா 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறுமென கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளதோடு, கோயிலில் பல இடங்களில் டிஜிட்டல் பதாகைகள் மூலம் தகவலை தெரிவித்துள்ளது.  எனினும் திருக்கணித பஞ்சாங்கத்தின் குறிப்பின்படி 2023 ஜனவரி மாதம் 17-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி என்றிருப்பதால், இதனை பின்பற்றுவோர் திருநள்ளாறு கோயிலுக்கு சுவாமி தரிசனத்துக்கு வந்துகொண்டிருக்கின்றனர்.

Story image

வழக்கமாக சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து சுவாமி தரிசனம் செய்வர். 2023 புத்தாண்டு பிறப்பு மற்றும் சனிக்கிழமை என்பதால் 31-ஆம் தேதி அதிகாலை முதல் இக்கோயிலுக்கு தரிசனத்துக்காக ராஜகோபுரம் முன்பாகவும், வரிசை வளாகத்தின் வழியே கோயிலுக்குச் செல்ல நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்ய கோயிலுக்குள் செல்கின்றனர்.

Story image

நளன் தீர்த்தக் குளத்திலும் பக்தர்கள் மிகுதியாக நீராடிவருகின்றனர். கோயில் நிர்வாகம் எதிர்பார்ப்பை மீறி பக்தர்கள் சனிக்கிழமை கோயிலுக்கு வந்துள்ளதால், சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்புவதில் பல மணி நேரமாவதாக தெரிவிக்கப்படுகிறது.

திருள்ளாறு பகுதியில் வாகனங்கள் மிகுதியாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. காரைக்கால் மாவட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.