மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தஞ்சாவூர் சுதர்சன சபாவை மீட்ட மாநகராட்சி நிர்வாகம்

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே ஏறத்தாழ 95 ஆண்டுகள் பழைமையான சுதர்சன சபாவை தனியாரிடமிருந்து மாநகராட்சி நிர்வாகம் செவ்வாய்க்கிழமை மீட்டது.

News image
தஞ்சாவூர் சுதர்சன சபா கட்டடம்.
Updated On :1 பிப்ரவரி 2022, 7:30 am

DIN

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே ஏறத்தாழ 95 ஆண்டுகள் பழைமையான சுதர்சன சபாவை தனியாரிடமிருந்து மாநகராட்சி நிர்வாகம் செவ்வாய்க்கிழமை மீட்டது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே சுதர்சன சபா 40,793 சதுர அடிப் பரப்பளவில் கட்டப்பட்டு 1927 டிசம்பர் 14ஆம் தேதி திறக்கப்பட்டது. மாநகராட்சிக்குச் சொந்தமான இந்த சபா ஆண்டு வாடகை அடிப்படையில் 99 ஆண்டுகள் குத்தகைக்குத் தனியாருக்கு மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.

சபாவை மீட்டு நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி அலுவலர்கள்.

சபாவை மீட்டு நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி அலுவலர்கள்.

ஒரு காலத்தில் நாடகம், இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமாக இருந்தது. ஆனால், இந்த சபாவில் பல ஆண்டுகளாகக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது பெருமளவு குறைந்துவிட்டது. இந்த சபா திமுக பிரமுகர் கட்டுப்பாட்டிலிருந்து வந்தது. இந்நிலையில், குத்தகை விதிமுறையை மீறி இந்த சபாவின் ஒரு பகுதியில் கட்டடம் கட்டப்பட்டு, உணவகம், மதுபானக்கூடம், பேக்கரி, கைப்பேசி உள்ளிட்ட கடைகளுக்கு உள் வாடகை விடப்பட்டதாகப் புகார் எழுந்தது.

Story image

இதன் பேரில், மாநகராட்சி அலுவலர்கள் சில மாதங்களுக்கு முன்பு உள் வாடகைக்கு விடப்பட்டிருந்த கடைகளைப் பூட்டி சீல் வைத்து, பின்னர் கையகப்படுத்தினர். இந்நிலையில், விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகத் தனியாரிடமிருந்து சுதர்சன சபாவையும் மாநகராட்சி ஆணையர் க.சரவணகுமார் உத்தரவின் பேரில், தமிழ்நாடு பொது வளாகங்கள் (ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) சட்டம் 1975}ன் படி மாநகராட்சி உதவிச் செயற் பொறியாளர் எம். ராஜசேகரன், பொறியாளர்கள் கண்ணதாசன், மகேந்திரன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை கையகப்படுத்தினர். பின்னர், இது தொடர்பாக தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டது. இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ஏறத்தாழ ரூ.100 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.