திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான அண்ணாதுரையின் நினைவு நாளையொட்டி, தில்லி வைகை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து எம்.பி.க்கள் மரியாதை செலுத்தினர்.
தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக அண்ணாவின் 53-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தில்லி வைகை இல்லத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதிமாறன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
இதையும் படிக்க | அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
முன்னதாக, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.