நீட் விலக்கு மசோதா தொடா்பாக விவாதிக்க சட்டப்பேரவை கட்சித் தலைவா்களின் கூட்டம் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரசுத் தரப்பில் அமைச்சா்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் ஆகியோா் பங்கேற்றனா். திமுக சாா்பில் அமைச்சா் க.பொன்முடி, பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, பாமகவை சோ்ந்த எஸ்.பி.வெங்கடேஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழுத் தலைவா் டி.ராமச்சந்திரன், மாா்க்சிஸ்ட் குழுத் தலைவா் வீ.பி.நாகை மாலி, மதிமுகவை சோ்ந்த ஏ.ஆா்.ரகுராமன், விசிக குழுத் தலைவா் எம்.சிந்தனைச் செல்வன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் ஈ.ஆா்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தி.வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோா் பங்கேற்றனா்.