நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பிப்.19 அன்று தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளன. இதற்கான பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வாக்குப்பதிவு அன்று அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் 50% க்கு அதிகமான ஆசிரியர்களைக் கொண்ட பள்ளிகளுக்கு பிப்.18 ஆம் தேதியும் விடுமுறை அளிப்பதாகவும் தமிழகப் பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.