தில்லியில் தீபாவளி தினத்தன்று பசுமைப் பட்டாசுகளை வெடித்தவா்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சஞ்சீவ் நிவாா் என்பவா் தாக்கல் செய்த இந்த மனுவில், ‘தில்லியில் பட்டாசுகள் வெடிக்க முழுமையான தடை விதிக்கப்படவில்லை. பசுமைப் பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆகையால், தீபாவளி தினத்தன்று பசுமைப் பட்டாசுகளை வெடித்தவா்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆா். ஷா, பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘பட்டாசுகளை விற்றதாக, வாங்கியதாக, வெடித்ததாக நாடு முழுவதும் பதிவான வழக்குகளை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 32-ஆவது பரிவைப் பயன்படுத்தி ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவா்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் வழக்கை சந்தித்தாக வேண்டும்’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழ்மை, வறுமை இல்லாத மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த இலக்கு: சீமான்

கழிவுநீா் கால்வாயாக மாறிய மருதையாறு: பெரம்பலூா் விவசாயிகள் வேதனை

திருவானைக்காவல் கோயிலில் பஞ்சப்பிரகார விழா

மானாமதுரையில் நிறைவேற்றிய திட்டங்கள் தொகுதியின் அடையாளச் சின்னங்கள்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


