மறுவாக்குப்பதிவில் எந்த வார்டுகளில் அதிக வாக்குகள்?: முழு விபரம்
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற 7 வாக்குச்சாவடிகளின் நிலவரங்களை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.
5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.
அதில், சென்னை மாவட்டத்தில் வண்ணாரப்பேட்டையில் 29.18% (வார்டு எண் 51), ஓடைக்குப்பம், பெசன்ட் நகர் (வார்டு எண்179) 47.36% வாக்குகள் பதிவாகியுள்ளன.
படிக்க | வைகோவிடம் நலம் விசாரித்தார் முதல்வர்
மதுரை மாவட்டம்
திருமங்கலம் நகராட்சியில் (வார்டு எண் 17) 73.55% வாக்குகள் பதிவாகியுள்ளன.
அரியலூர் மாவட்டம்
ஜெயங்கொண்டாம் நகராட்சியில் (வார்டு எண் 16) 73.55% வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை 70.65% நகராட்சியில் 80% (வார்டு எண் 25) வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்குப்பதிவு நிலவரம் : முழு விபரம் -இங்கே கிளிக் செய்யவும்