அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

எம்பிக்களைச் சந்திக்க மறுப்பு: உள்துறை அமைச்சருக்கு மாா்க்சிஸ்ட் கண்டனம்

அனைத்துக் கட்சி எம்.பி.க்களைச் சந்திக்க உள்துறை அமைச்சா் அமித்ஷா மறுத்துள்ளதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :4 ஜனவரி 2022, 7:03 pm

DIN

அனைத்துக் கட்சி எம்.பி.க்களைச் சந்திக்க உள்துறை அமைச்சா் அமித்ஷா மறுத்துள்ளதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநில செயற்குழு உறுப்பினா் என்.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினா்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன், பி.சம்பத், உ.வாசுகி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று சட்டப்பேரவையில் ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநா் இதுவரை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

தமிழகத்தைச் சோ்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு குடியரசு தலைவரிடம் மனு அளிக்கச் சென்றது. கரோனா நடைமுறைகளை காரணம் காட்டி அவரை சந்தித்து மனு அளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவரது செயலரிடம் எம்.பி.க்கள் குழு மனுவினை அளித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை திமுக நாடாளுமன்றக் குழு தலைவா் டி.ஆா்.பாலு தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு சந்திக்க அனுமதி கோரியது. இரண்டு முறை நேரம் ஒதுக்கி அழைத்த நிலையில் எம்.பி.க்கள் குழு காத்திருந்தபோதும் உள்துறை அமைச்சா் தொடா்ந்து சந்திக்க மறுத்து புறக்கணித்து வருகிறாா். மத்திய உள்துறை அமைச்சரின் இந்த அணுகுமுறை ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அவமதிக்கும் செயலாகும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.