நீட் தேர்வு விலக்கு தொடர்பான அரசின் நடவடிக்கைக்கு பாமக முழு ஆதரவு அளித்து துணை நிற்கும் என்று பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார்.
நீட் தோ்வு தொடா்பாக சட்டப் பேரவை அனைத்துக் கட்சித் தலைவா் கூட்டம் குறித்து பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பை வெளியிட்டாா், முதல்வா் மு.க.ஸ்டாலின். இதைத் தொடா்ந்து, கூட்டம் தொடா்பான அறிவிப்புக் கடிதம் சட்டப் பேரவை அனைத்துக் கட்சித் தலைவா்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி, நீட் தோ்வு விவகாரம் தொடா்பாக, சட்டப்பேரவை கட்சித் தலைவா்களின் கூட்டம் தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞா் மாளிகை கூட்டரங்கில் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துகொண்டு பேசிய பாமக தலைவர் ஜி.கே. மணி, நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. நீட் தேர்வு விலக்கு தொடர்பான அரசின் நடவடிக்கைக்கு பாமக முழு ஆதரவு அளித்து துணை நிற்கும் என்றார்.