மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி:  ஆர்வத்துடன் பங்கேற்ற இளைஞர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பொங்கல் திருவிழாவையொட்டி, இளவட்டக்கல் தூக்கும் போட்டி பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

News image
ஸ்ரீவில்லிபுத்தூரில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி:  ஆர்வத்துடன் பங்கேற்ற இளைஞர்கள்
Updated On :15 ஜனவரி 2022, 5:53 am

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பொங்கல் திருவிழாவையொட்டி, இளவட்டக்கல் தூக்கும் போட்டி பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழா முடிந்த மறுநாள் மாட்டுப் பொங்கல் தினத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் இந்து நாடார் உறவின் முறை  பள்ளி மைதானத்தில் இந்த இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெறும். சமுதாய நல்லிணக்க பேரவை மற்றும் சேவாபாரதி சார்பில் நடைபெறும் இந்த போட்டி சனிக்கிழமை காலை தொடங்கியது.

இந்த விழாவிற்கு நாடார் மகாஜன சங்க துணைத் தலைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார். சமுதாய நல்லிணக்க பேரவையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் சிவலிங்கம், தங்கராஜ், சங்கரலிங்கம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 18 வயதுக்கு மேற்பட்ட இந்த இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் அறுபத்தி எட்டு கிலோவில் இருந்து சுமார் 88 கிலோ வரை இளவட்ட கற்கள் வைக்கப்பட்டன.

Story image

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000 மதிப்புள்ள பரிசு பொருளும், இரண்டாம் பரிசு ரூ. 4000 மதிப்புள்ள பரிசு பொருளும், மூன்றாம் பரிசு ரூ.3000 மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.  கலந்துகொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசம், வெற்றி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.